தந்தை பெரியார் சிந்தனை வரிகள் - தமிழ்
Periyar inspirational words in tamil
தந்தை பெரியார் சிந்தனை வரிகள் - தமிழ்
Periyar inspirational words in tamil
தந்தை பெரியார் சிந்தனை வரிகள் - தமிழ்
Periyar inspirational words in tamil
தந்தை பெரியார்
1. நூறு அறிவாளிகளுடன் மோதுவதை விட ஒரு முரடனோடு மோதுவது
மிக சிரமமானது.
2. இலட்சியத்தை அடைவதற்காக கஷ்ட நஷ்டம் என்ற விலையை
கொடுத்தே ஆக வேண்டும்.
3. நம் நாட்டில் புதிதாக ஒருவரை சந்தித்தால் அவர் உத்தியோகம்
என்ன என்று கேட்போம், ஆனால் ரசியாவிலோ சமுதாய சேவை என்ன என்றுதான் கேட்பார்கள்.
4. மூட்டை தூக்கும் போது பாரத்தினால் நான் கஷ்டப்பட்டு
கொண்டிருப்பேன் தவிர ஒருபோது நான் வெட்கத்தினால் கஷ்டப்பட்டதில்லை.
5. நமக்கு வேண்டியதெல்லாம் கோவிலல்ல பள்ளி கூடம்தான்.
6. புத்திசாலிகள் சண்டை இட்டுக்கொள்வது எப்போதுமே இயற்கைதான்.
7. அறிவுள்ளவருக்கு அறிவின் செயல். அறிவில்லாதவருக்கு
ஆண்டவன் செயல்.
8. பெண்களுக்கு வேண்டியது புத்தக படிப்பு மட்டுமல்ல,
உலக அறிவும் தான்.
9. உண்மையை பேசும்போது பழிப்பு ஆளாவது பற்றி கவலை கொள்ளக்கூடாது.
10. நான்கு ஆண்களும் , ஒரு பெண்ணும் அந்த குடும்பத்தி
இருந்தால், முதலில் அந்த பெண்ணைத்தான் படிக்க வைக்க வேண்டும்.
11. வாழ்க்கையின் லட்சியமே மனித சமுதாயத்திற்கு தொண்டாற்றுவது.
12. எந்த மனிதனும் எனக்கு கீழானவன் அல்ல, அதுபோல எவனும்
எவனுக்கும் மேலானவனும் அல்ல.
எவனுக்கும் மேலானவனும் அல்ல.
13. பொது தொண்டு செய்பவனுக்கு ஏற்படும் தொல்லை அவன் தனது லட்சியத்துக்கு கொடுக்கும் விலை.
14. சர்வ சக்தி உள்ள கடவுள் ஒருவர் இருந்தால், கடவுள்
இல்லை என்பவர்கள் எப்படி உலகத்தில் இருக்க முடியும்?
15. கல்லை கடவுள் என்று கூறும் மனிதன், பார்ப்பனனை சுவாமி
என்று கும்பிடுவதில் அதிசயமில்லை.
16. மதங்கள் என்பவை எல்லாம் மனிதனால் உண்டாக்கப்பட்டவையே
17. ஒரு உயிரை பட்டினிபோட்டு சாகடிப்பதை விட, ஒரு பெண்ணை
விதவையாக வைத்து சாகாமல் காப்பாற்றுவது கொடுமையானது.
18. கற்பு என்ற சொல் இருந்தால் அது ஆண்களுக்கும் இருக்க
வேண்டும்.
19. பிச்சைக்காரர்கள் இருப்பதும், அவர்கள் பிச்சை எடுப்பதும்,
மனித சமுதாயத்திற்கு ஒரு பெருந்தொல்லையும், இழிவும் ஆகும்.
20. பகுத்தறிவு என்பது ஆதாரத்தை கொண்டு தெளிவடைவதாகும்.