டால்ஸ்டாய் சிந்தனை வரிகள் - தமிழ்
leo Tolstoy inspirational words in tamil
டால்ஸ்டாய் சிந்தனை வரிகள் - தமிழ்
leo Tolstoy inspirational words in tamil
டால்ஸ்டாய் சிந்தனை வரிகள் - தமிழ்
leo Tolstoy inspirational words in tamil
டால்ஸ்டாய்
1. பொறுமை மற்றும் நேர்மை ஆகியவையே மிகவும் சக்திவாய்ந்த
வீரர்களுக்கு இணையானது.
2. எங்கு அன்பு நிறைந்திருக்கிறதோ அங்குதான் ஆண்டவனும்
இருக்கிறார்.
3. மனிதர்கள் வெளிச்சத்தை விட இருட்டையே விரும்புகிறார்கள்.ஏனெனில்
அவர்கள் செய்யும் தீய செயல்கள் மற்றவர்களுக்கு தெரியாது போவதற்காகத்தான்.
4. ‘கலை கலைக்காகவே’ என்ற கோட்பாட்டின் படி நமக்கு திருப்தியளிக்கும்
விஷயங்களிலெல்லாம் ஈடுபடுவது கலையன்று.
5. நல்ல வாழ்க்கை நடத்துவதற்கு நல்ல பண்பு அவசியம்.
6. ஒரு வினாடி கூடநாம் நம்மை சந்தேகிக்க அனுமதிக்க கூடாது.
7. ஒரு போதும் குற்றம் செய்யாதவன் எதையும் செய்ய தகுதியற்றவன்.
8. நீங்கள் நன்மை செய்யாவிட்டாலும் பரவாயில்லை , தீமை செய்வதை நிறுத்துங்கள்.
9. தொழில் எத்தனை கீழ்தரமானதாக இருந்தாலும் அதை செய்வதில்
அவமானம் ஒன்றும் இல்லை.சோம்பேறியாக திரிவதுதான் அவமானம்.
10. செல்வாக்கு நீடித்திருக்க வேண்டுமானால் செல்வதை
போலவே அதையும் சிக்கனமாக செலவு செய்யவேண்டும்.
11. நாம் அனைவரும் மரணதண்டனைக்கு ஆளானவர்கள். ஆனால்
தூக்கிலிடும் தினம் தான் வேறு.
12. மரணத்திற்கு பிறகு என்ன இருக்கிறது என்று என்பதை
தெரிந்து கொள்ளும் வரை , மனிதர்கள் மரணத்தை கண்டு பயந்து கொண்டுதான் இருப்பார்கள்.
13. எப்போது துணிவுடன் இருக்க வேண்டும், தடைகள் ஏற்படும்போதெல்லாம்,
துணிவு இருந்தால்தான் செயல்பட முடியும்.
14. வாழ்வில் ஏற்படும் சிறுசிறு மாற்றங்களே , வாழ்க்கையை
உண்மையாக வாழ வைக்கின்றன.
15. கஷ்டப்பட்டு உழையுங்கள், நீங்கள் உழைக்கும் எந்த
உழைப்பும் வீணாவதில்லை.
16. காத்திருக்க தெரிந்தவனுக்கே அனைத்தும் கிட்டும்.
17. வீணாகாத ஒரே விஷயம் உழைப்பு மட்டுமே.
18. இன்றைய ஊதாரி வருங்கால பிச்சைக்காரன்.
19. நான் யார், நான் ஏன் இங்கு இருக்கிறேன் என்பதை அறியாதவாறு
வாழ்கை சாத்தியமற்றதே.
20. எங்கு எளிமை, நேர்மை, மற்றும் உண்மை இல்லையோ அங்கு
உயர்வும் மேன்மையும் இல்லை.